பக்கங்கள்

03 பிப்ரவரி 2013

மிருகங்களுக்கு உள்ள நீதி கூட மனிதர்களுக்கு இல்லை!

இலங்கையில் நீதி பேணப்படுவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். எந்தவொரு நபரும் தனக்குத் தேவையான வகையில் செயற்படுவதற்கு இந்நிலமை வழிவகுத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். நாட்டில் நீதி பேணப்படாத இந்த நிலைமையின் காரணமாக பாரிய பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என சோமவன்ச அமரசிங்க குறிப்பிட்டுள்ளார். மிருகங்களுக்கு இருக்கும் நீதி கூட இலங்கை நாட்டினுள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். காலி, ஹபராதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.