பக்கங்கள்

20 பிப்ரவரி 2013

நாவற்குழியில் பதற்றம்: சிங்கள குடியேற்றவாசிகள் மீது தாக்குதலுக்கு தயார்படுத்தல்?

தமிழர் தாயகத்தை சிதைக்கும் நோக்கோடு சிங்களவர்களை தமிழீழப் பகுதியில் சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டவகையில் குடியேற்றி வருகிறது. அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் சுமார் 134 குடும்பங்கள் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளின் பாதுகாப்புடன் குடியேற்றப்பட்டுள்ளனர். தமிழ்மக்கள் அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமது பூர்வீக நிலங்களை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் சிங்களவர்களை தமிழர்களின் மரபுரீதியான தாயகத்தில் குடியேற்றும் நடவடிக்கை தமிழர் தரப்பிடம் கடும் ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளது. இந்தநிலையில், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் புத்திரன் பாலகன் பாலச்சந்திரன் சிங்கள இன அழிப்புப் படைகளால் கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்மை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை உண்டுபண்ணியுள்ளது. இந்த கொந்தளிப்பு யாழ்ப்பாணத்தில் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், நாவற்குழியில் திட்டமிட்ட வகையில் குடியேற்றப்பட்டுள்ள சிங்களவர்கள் மீது தாக்குதல் நாடத்தவென இளைஞர்கள் குழு தயாரவதாக வெளியான தகவல் பெரும் பரபரப்ரை ஏற்படுத்தியுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி:பரிஸ்தமிழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.