பக்கங்கள்

19 பிப்ரவரி 2013

கிளிநொச்சியில் சிறுவர் இல்லத்தில் துஸ்பிரயோகம்!

கிளிநொச்சியிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றைச் சேர்ந்த சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில் நேற்று (18) இவர்களைப் பொலிஸார் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் நீதிமன்றம் குறித்த நபர்களில் ஒருவரை எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மற்றைய நபரை ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையிலும் 50 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் செல்ல அனுமதியளித்துள்ளது. அத்துடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர் வாரத்தில் ஒரு நாள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.