பக்கங்கள்

02 பிப்ரவரி 2013

கிளிநொச்சியில் சிறுவர்கள் மீது படைகள் தாக்குதல்!

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இரு சிறுவர்கள் நேற்று சீருடையினரால் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது,கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது: கிளிநொச்சி பரந்தன் ஏ35 வீதியில் அமைந்துள்ள அம்மன் ஆலயத்தில் வழிபாடு முடித்து 8 வயது, 10 வயதான இரு சிறுவர்கள் வீடு திரும்பினார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து ஓட்டோ ஒன்றில் வந்த சீருடையினர் சிறுவர்களை அவர்களின் வீட்டின் முன்பாக வைத்து கைத்தொலைபேசியைத் திருடியதாகக் கூறி மிரட்டியுள்ளனர். எனினும் தாம் அதனைத் திருடவில்லை எனச் சிறுவர்கள் கூறியுள்ளனர். இதன் பின்னர் அங்கிருந்து சென்ற சீருடையினர் மீண்டும் முற்பகல் 10.30 மணியளவில் வந்து சிறுவர்களை அருகில் உள்ள தமது முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் தனியாக அறை ஒன்றில் அடைத்து வைத்துத் தம்மைப் பிளாஸ்ரிக் குழாயினால் தாக்கியதாகச் சிறுவர்கள் தெரிவித்தனர். பரந்தன் கிளிநொச்சியைச் சேர்ந்த நந்தகுமார் பவுசிகன் (வயது10) அவரது சகோதரரான நந்தகுமார் டினேஸ் (வயது8) ஆகிய இரு சிறுவர்களுமே தாக்கப்பட்டவர்கள் ஆவர். தற்போது இந்த இரு சிறுவர்களும் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.