பக்கங்கள்

13 பிப்ரவரி 2013

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் சித்திரவதைகளுக்கு ஆளாகினர்!

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்பட்டதாக கார்டியன் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.நாடு கடத்தப்பட்ட பதினைந்து இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2009ம் ஆண்டு யுத்த நிறைவு முதல் 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் நாடு கடத்தப்பட்டவர்களே இவ்வாறு துன்புறுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. நாடு கடத்தப்பட்ட 15 புகலிடக் கோரிக்கையாளர்கள் மீளவும் பிரித்தானியாவிற்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மீளவும் பிரித்தானியாவிற்குள் பிரவேசித்த குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தல்கள் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளனர். தற்போது குறித்த இலங்கையர்களுக்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, புகலிடம் பெற்றக்கொள்ளும் நோக்கில் இவ்வாறு துன்புறுத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக பிரித்தானியாவிற்கான இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் நெவில் டி சில்வா தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறும் நபர்கள், தமக்கு சித்திரவதை அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவித்து புகலிடம் பெற்றுக்கொள்ள முயற்சிப்பது வழமையான ஓர் நிலைமை என குறிப்பிட்டுள்ளார். நாடு கடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் சித்திரவதைகளை அனுபவிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக பிரித்தானிய மனித உரிமை அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.