பக்கங்கள்

14 பிப்ரவரி 2013

சிறுமியை பலாத்காரம் செய்த இருவர் தலைமறைவு!

நலன்புரி முகாமில் வசித்து வந்த 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாக கூறப்படும் அதே முகாமைச்சேர்ந்த இரு இளைஞர்கள் தலைமறைவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுமி தனிமையில் இருந்த போதே குறித்த இரு இளைஞர்களும் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தற்காலிக வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து இக்குற்றத்தை புரிந்துள்ளனர். சுன்னாகம் பகுதியிலுள்ள இடம்பெயர் நலன்புரி முகாமில் வசித்து வந்த சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கபட்ட சிறுமியின் பெற்றோர் சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.