பக்கங்கள்

22 பிப்ரவரி 2013

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக இன்று திரையிடப்படுகிறது ‘போர் தவிர்ப்பு வலயம்’

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் ‘போர் தவிர்ப்பு வலயம்’ ஆவணப்படம் முதல் முறையாக நாளை புதுடெல்லியில், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் திரையிட்டுக் காண்பிக்கப்படவுள்ளது. புதுடெல்லியில் உள்ள அரசியலமைப்பு கழகத்தில் (Constitution Club) இன்று பிற்பகல் 4.30 மணிக்கு இந்த ஆவணப்படத்தின் 20 நிமிடக் காட்சிகள் திரையிடப்படவுள்ளன. இதையடுத்து, மாலை 5 மணியளவில் குழுநிலை விவாதம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில், அனைத்துலக மன்னிப்புச் சபையின் இந்தியாவுக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி ஜி.அனந்தபத்மநாதன், போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தின் இயக்குனர் கல்லும் மக்ரே, ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்தின் பிரதம செய்தி ஆசிரியர் எம்.ஆர்.நாராயணசாமி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் பி.சகாதேவன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.