பக்கங்கள்

26 பிப்ரவரி 2013

தேசிய தலைவரின் இளையமகனின் படுகொலையில் இந்தியா!

பாலசந்திரன் படுகொலை குறித்து நடுநிலையான விசாரணை நடத்த வேண்டியது இந்திய அரசுக்கு முக்கியமானது என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரியான கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா படையினரால் உணவு கொடுத்த பின்னர் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டும் ஒளிப்படங்கள் பிரித்தானிய ஊடகம் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் நடத்தபட்ட போர் இந்தியாவின் ஆசிர்வாதத்துடன் நடத்தப்பட்ட போர். இது இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமான அரசு ஒன்றின் மிருகத்தனமான, வெறுக்கத்தக்க செயல். இந்ந குற்றச்செயலுடன் இந்தியாவுக்கும் தொடர்புள்ளது. எனவே, மனிதாபிமான கரிசனைகள், இந்தியாவின் தனிப்பட்ட நலன்களின் அடிப்படையில், குற்றச்சாட்டுகள் குறித்து நடுநிலையான விசாரணை தேவை. உண்மையென்று உறுதிப்படுத்தப்பட்டால், அது சிறிலங்காவின் போர்க்குற்றம் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை. இது பிரபாகரனின் இளையமகன் என்பதால் முக்கியத்துவம் இல்லை, அவன் ஒரு சிறுவன், விடுதலைப் புலிப் போராளி அல்ல இன்னும் ஆயிரக்கணக்கானோருக்கு நேர்ந்த கதியைப் போலவே போரின் போதோ அதற்குப் பின்னரோ பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தடுப்புக்காவலில் இருந்த விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக சனல்4 தொலைக்காட்சி முன்னர் வெளியிட்ட குற்றச்சாட்டை, இது மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.