பக்கங்கள்

16 பிப்ரவரி 2013

எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விடுதலை கேள்விக்குறியே!

2013-02-15 10_10_59(1)பலாலி விமானப்படைத் தளத்தின் பாதுகாப்பு முக்கியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க கூறுகிறார். எனவே இன்றுள்ள எதிர்க்கட்சி நாளை அரசமைத்தாலும் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. இவ்வாறு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் ச.யேசுதாஸ் தெரிவித்தார். வலி.வடக்கு உண்ணா விரதப்போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித் தவை வருமாறு, ஜனநாயக நாடு என்று சொல்கிறார்கள். போரின் பின்னர் இங்கு சுதந்திரம் நிலவுவதாகச் சொல்கின்றார்கள். அப்படியானால் இந்தப் போராட்டத்தில் ஏன் மக்களை விரட்ட வந்தீர்கள்? என்ன ஜனநாயகம் நாட்டில் இருக்கிறது? என்ன பாதுகாப்பு இந்த நாட்டில் இருக்கிறது? இங்குள்ள பாதுகாப்பு படைகள் சிவில் சமூகம் அடங்கிய அரசைப் பாது காக்கவில்லை. மாறாக அரசை மட்டுமே பாதுகாக்கின்றன. பலாலி விமானப் படைத்தளத்தின் பாதுகாப்பு முக்கியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சொல்கிறார். அப்படியானால் இந்த எதிர்க் கட்சி நாளைக்கு அரசமைத்தாலும் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. மக்களாகிய நீங்கள் வீதிக்கு வந்து போராடும் வரையில் இந்த விடுதலையை அடைய முடியாது. நாம் இந்த அரசிடம் நிவாரணம் கோரவில்லை. வடக்கின் வசந்தம் என்று சொல்கிறார்கள். எல்லோரையும் நாட்டில் குடியமர்த்தி விட்டோம் என்று சொல்கிறார்கள். ஆனால் 1990 ஆம் ஆண்டிலிருந்து இந்த மக்கள் நலன்புரி நிலையங்களில் எப்படி வாழ்கிறார்கள் என்று தெரியாதா? சர்வதேச சமூகம் கூட கொஞ்சம் நாடகம்தான். அரசின் நிகழ்ச்சி நிரலில் இங்கு வந்து பார்த்துவிட்டு எல்லாம் சிறப்பாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படியானால் நாம் யாரிடம் போவது? மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும். முயற்சிப்போம். தொடர்ந்து முயற்சித்தால் நாம் வெல்லலாம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.