பக்கங்கள்

26 பிப்ரவரி 2013

போர் தவிர்ப்பு வலயத்திற்கு தடை கோருகிறது சிறீலங்கா!

சிறீலங்காவின் படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பிலான பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தின் விவரணச் சித்திரத்திற்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் செனல்4 ஊடகத்தின் விவரணச் சித்திரம் காட்சிப்படுத்தபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறீலங்கா தெரிவித்துள்ளது. நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் போலியான தகவல்களை உள்ளடக்கி இந்த விவரணம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.அடிப்படையற்ற தகவல்களை மையமாகக் கொண்டு இந்த விவரணம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த விவரணத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை திரையிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.விவரணத்தை திரையிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டால் அது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கொள்கைகளை கோட்பாடுகளை அந்த அமைப்பே மீறும் வகையில் அமைந்துவிடும் என ரவிநாத் ஆரியசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். செனல்4 ஊடகத்தின் குறித்த விவரணச் சித்திரம் காட்சிப்படுத்தக் கூடாது என்பதனை வலியுறுத்தி இலங்கை உத்தியோர்வமாக கடிதமொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.