பக்கங்கள்

04 பிப்ரவரி 2013

பிக்கு வெட்டிக்கொலை!சந்தேகநபர்கள் சுட்டுக்கொலை!

மொரட்டுவ எகடஉயன விஹாரையின் பீடாதிபதி கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். காணிப் பிரச்சினை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு பேருக்கு எதிராக குறித்த பௌத்த பிக்கு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். காணிப் பிரச்சினை தொடர்பிலும் நேற்றைய தினமும் குறித்த பௌத்த பிக்கு, இரண்டு பேருக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை, கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.பண்டாரகம பிரதேசத்தில் குறத்த சந்தேக நபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.குறித்த இருவரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.