பக்கங்கள்

18 பிப்ரவரி 2013

வேலணையில் வாலிபர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்!

குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் குளத்து நீரிழ் முழ்கி உயிரிழந்துள்ளார். வேலணை 8ஆம் வட்டாரத்தில் சேர்ந்த பாலசுப்பிரமணியம் நிரோஜன் (வயது 18) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார். அதே இடத்தில் உள்ள வேணா குளத்தில் மைத்துனருடன் குளிக்கச் சென்றுள்ளார். தன்னுடன் வந்த மைத்துனரை காணவில்லை என வீட்டில் தெரிவித்த போது உறவினர்களினால் இளைஞனின் சடலம் குளத்தில் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சடலம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.