பக்கங்கள்

12 பிப்ரவரி 2013

சம்பூரில் குடும்பத் தலைவர்கள் புனர்வாழ்வு என்ற பேரில் கைது!

மூதூர் கிழக்கு பிரதேசத்தில் 2006 ஏப்ரலில் நடத்தப்பட்ட யுத்த நடவடிக்கையின்போது இடம்பெயர்ந்த பல தமிழ்க் குடும்பங்கள் நலன்புரி நிலையங்களிலும் மற்றும் உறவினர்களுடனும் தங்கியே வாழ்கின்றனர். இந்நிலையில், அண்மையில் அவர்களில் ஏழு பேரை புனர்வாழ்வுக் கொடுப்பதாக கூறி கொழும்பிலிருந்து வந்த சிறப்பு புலானாய்வுப் பிரிவுக்குழு கைது செய்து கூட்டிக்கொண்டு சென்றதை அடுத்து கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை மற்றும் கட்டைப்பறிச்சான் ஆகிய இடங்களில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகவலை திருகோணமலை மாவட்டத்தின் முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உபதலைவருமான க.துரைரெட்னசிங்கம் வெளியிட்டார். புனர்வாழ்வு என்ற பெயரில் இடம்பெயர்ந்து அமைதி வாழ்வை மேற்கொண்டு வருகின்ற ஏழைக்குடும்பங்களின் வாழ்வில் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக உழைக்கின்ற குடும்பத்தலைவர்களைக் கைது செய்ததன் மூலம் அக்குடும்பங்களின் வாழ்வு சீரழிக்கப்பட்டு விட்டது என்றும் துரைரெட்னசிங்கம் கவலை தெரிவித்தார். காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட ஏழு பேரின் பெயர்களையும் அவர் வெளியிட்டார். அவர்களில் இருவர் பட்டித்திடல் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் ஆவர். பெயர் விவரங்கள் வருமாறு:- 1கட்டைப்பறிச்சான்: த.உதயகுமார் வயது 31, மூன்று பிள்ளைகளின் தந்தை 2.பட்டித்திடல் முகாம்: த.ஜெயகாந்தன், வயது 30 இரண்டு பிள்ளைகளின் தந்தை 3.லிங்கபுரம்: வைரமுத்து வசந்தம், வயது 36, இரண்டு பிள்ளைகளின் தந்தை 4.லிங்கபுரம்: சுப்பிரமணியம் மகேந்திரன், வயது 40, இரண்டு பிள்ளைகளின் தந்தை 5. பட்டித்திடல்: கோணலிங்கம் சந்திரகுமார், ஒரு பிள்ளையின் தந்தை 6.பட்டித்திடல்: எஸ்.தவச்செல்வன், வயது 35, ஒரு பிள்ளையின் தந்தை 7.கிளிவெட்டி முகாம்: வடிவேல் இராமு, வயது 35, இரண்டு பிள்ளைகளின் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.