பக்கங்கள்

07 பிப்ரவரி 2013

தேசியத்தலைவரின் வரலாறு திரைப்படமாகிறது...

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகத் தயாரிக்கப்படவுள்ளது. தென்னிந்திய சினிமா இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். இது குறித்து இயக்குநர் ரமேஷ் தெரிவித்ததாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன். விடுதலைப்புலிகள் தரப்பிலான ஈழமக்களிடம் இருந்து இந்தப் படத்தை எடுப்பதற்காக ஆட்சேபனை இருக்காது என்று கருதுகிறேன். இதற்கான தகவல்களை தமிழ் மக்கள் எனக்கு நிறையவே வழங்கியுள்ளனர். ஈழத்தமிழ் மக்களுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். புலிகள் குறித்த பல தகவல்களை அவர்கள் எனக்கு கொடுதிருக்கிறார்கள்என்றார். இந்திய அரசிடம் இருந்து தடை வருமே என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டதற்கு, "பார்ப்போம், படம் எடுப்பது தான் என்னுடைய வேலை, அதனால் பிரச்சனை வந்தால் அதைச் சமாளிப்போம்.' என்றார் ரமேஷ். வீரப்பன் கதையை வனயுத்தம் என்ற பெயரில் படமாக எடுத்துள்ளேன். பதினொரு வருடங்கள் வீரப்பன் வாழ்ந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வீரப்பனிடம் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர்களிடம் விசாரித்து இந்த படத்தை எடுத்துள்ளேன். உண்மையான பாத்திரங்களே இதில் உள்ளன. யாரையும் புண்படுத்தும் பகுதிகள் படத்தில் இல்லை. இப்படத்துக்கு எதிராக வீரப்பன் மனைவி முத்துலட்சுமி நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்று உத்தரவுப்படி சில பகுதிகள் நீக்கப்பட்டு உள்ளன. எதிர்வரும் 14ஆம் திகதி படம் வெளிவருகின்றது. அதே போன்று தலைவர் பிரபாவின் படத்தையும் எடுக்கவுள்ளேன் என்றார் இயக்குநர் ரமேஷ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.