பக்கங்கள்

01 ஆகஸ்ட் 2010

பான் கி மூனின் நடவடிக்கைகள் அரசியலிலேயே நிறைவடைகிறது.



ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் தற்போது எந்த தீர்மானத்தை எடுத்து எதனை தெரிவித்தாலும் இறுதியாக அது அரசியல் நோக்கத்திலேயே சென்று நிறைவடையும் என இன்னர் சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை போர் குற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க தொடர்ந்தும் தாமதம் காட்டி வரும் நிலையில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழு, நியமிக்கப்பட்டதே தவிர பின்னர் எந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்பது குறித்த தகவல் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.
எது எவ்வாறாயினும் எல்லா பொது செயலாளர்களைப் போலவே பான் கீ மூனின் செயற்பாடுகளும் அரசியல் நோக்கத்திலேயே நிறைவடைந்து விடும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.