பக்கங்கள்

15 ஆகஸ்ட் 2010

"திருக்குவளை தீயசக்தி': கருணாநிதிக்கு புதிய பெயரிட்டார் ஜெயலலிதா.


கருணாநிதியை திருக்குவளை தீயசக்தி என்றே இனிமேல் அனைவரும் குறிப்பிடுவோம் என்றார் ஜெயலலிதா.
இதுதொடர்பாக அவர் மேலும் பேசியது:
"ஒருவரின் பெயரைச் சொல்லி அழைப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். கருணாநிதி என்று பெயரைச் சொல்லி அழைக்கிறேன் என்று வருத்தப்பட்டிருக்கிறார் கருணாநிதி.
என்னை ஜெயலலிதா என்று அழைத்தால் நான் தவறாகக் கருதமாட்டேன். ஜெயலலிதா என்பது பெற்றோர் வைத்த பெயர். அதைச் சொல்லி அழைப்பதில் தவறில்லை.
நேருவையும், இந்திராவையும், காமராஜரையும் பெயரைச் சொல்லித்தானே குறிப்பிடுகிறோம். அதனால் அவர்களின் மதிப்பு ஒன்றும் குறைந்துவிடவில்லையே? நாடாளுமன்றத்தில் பேசும்போது அதிமுக எம்பிக்கள், புரட்சித் தலைவி என்றோ, அம்மா என்றோ குறிப்பிட்டுப் பேச வேண்டாம் எனக் கூறியிருக்கிறேன். அவ்வாறு சொல்லுவதால், பிற்காலத்தில் அவைக் குறிப்புகளைப் படிக்கும்போது, உண்மையான பெயர் வரும் சந்ததிக்குத் தெரியாமலே போய்விடலாம்.
இருப்பினும், பெயரைச் சொல்லி அழைப்பது கருணாநிதிக்கு வருத்தத்தை அளிப்பதால், அவருக்கு எம்ஜிஆர் சூட்டிய "தீயசக்தி' என்ற பெயரைச் சூட்டுவோம். திருக்குவளை தீயசக்தி என்றே கருணாநிதியை அழைப்போம். இந்த தீய சக்திகளை அகற்ற, குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் அனைவரும் "கை' கோர்த்து செயல்பட வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது. வெற்றி நம்மை அழைக்கிறது. களப்பணி ஆற்றத் தயாராகுங்கள்' என்றார் ஜெயலலிதா.
அழுந்தச் சொன்ன "கை': "குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நாம் அனைவரும் கை கோர்த்து செயல்பட வேண்டிய தருணம் நெருங்கி விட்டது' எனக் குறிப்பிடும்போது "கை' என்ற ஒற்றைச் சொல்லை அழுந்தச் சொன்னார். ஜெயலலிதா பேசியபிறகு, அந்தப் பேச்சின் பிரதி பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட்டது. அந்தப் பிரதியில் "கை' என மேற்குறியிடப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.