பக்கங்கள்

02 ஆகஸ்ட் 2010

வழக்கின்றியே சரத்தை தூக்கில் போட முயற்சியாம்.


முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா எம்.பி , பொன்சேகாவின் செயலாளர் என்று கூறப்படும் சேனக டீ சில்வா ஆகியோருக்கு எதிரான வழக்குகளை நடத்தாமலேயே, அவர்களைத் தூக்கில் போட சட்ட மா அதிபர் முயற்சிக்கின்றார் என்று இருவரையும் ஆதரித்து இன்று மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி திரந்த வரலியத்த நீதிமன்றில் தெரிவித்தார்.
படை விட்டோடிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்கிற வழக்கு இருவருக்கும் எதிராக இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. அப்போதே, சேனக டீ சில்வாவும் பொன்சேகாவும் ஒருவரை ஒருவர் ஒரு மணித்தியாலம் வரை சந்தித்து இவ்வழக்கு சம்பந்தமாக உரையாட இந்நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கோரினார்.
அவர் அங்கு தெரிவித்தவை வருமாறு:
”தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கச் சந்தேகநபர்கள் கூட உறவினர்களுடன் உரையாடுகின்றமைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.எனவே இந்நீதிமன்ற வளாகத்திலோ,பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கடற்படை தலைமைக் காரியாலயத்திலோ இருவரும் சந்தித்து உரையாட அனுமதிக்க வேண்டும்.”
ஆனால் சட்டமா அதிபரின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி தமித் தோட்டவத்த இந்த அனுமதியை நீதிமன்றம் வழங்கவே கூடாது என்றார். அதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்றும் கூறினார். அப்போதே வழக்கை நடத்தாமலேயே அவரது கட்சிக்காரர்கள் இருவரையும் தூக்கில் போட சட்ட மா அதிபர் முயற்சிக்கின்றார் என்று ஜனாதிபதி சட்டத்தரணி பதிலுக்கு சொன்னார்.
இவ்வழக்கை விசாரித்த கொழும்பு பிரதான நீதிவான் ரஸ்மி சிங்கப்புலி சந்தேகநபர்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து விட்டார் இவ்வழக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் இடம்பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.