பக்கங்கள்

28 ஆகஸ்ட் 2010

யாழில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.



யாழ் கொட்டடிப் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 42 வயதுடைய தாய் ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
யாழ் நகர பாடசாலையில் கல்வி கற்கும் இந்தப் பெண்ணின் சிறிய மகள் வீதியில் கிடந்த பொருள் ஒன்றை எடுத்துச் சென்று வீட்டின் அடுப்பில் போட்டதாகவும் அந்தப் பொருள் வெடித்ததனால் 42 வயதுடைய சிவரட்ணேஸ்வரி என்ற தாய் கடும் காயங்களுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்ததாக ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது யுத்தகாலத்தில் பண்ணைப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருளாக இருக்கலாம் எனத் தெரிவிக்கும் காவற்துறையினர் மேலதிக விசாரனைகளைத் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.