பக்கங்கள்

19 ஆகஸ்ட் 2010

எம்.வி.சன்.சி கப்பலில் வந்த குழந்தையின் தலையில் குண்டின் சிதறல்கள்!



எம்.வி.சன்.சி கப்பலில் கடந்த வாரம் கனடாவை வந்தடைந்திருக்கும் மக்கள் கூட்டத்திலிருந்த 2 வயது நிரம்பிய குழந்தையின் தலையில் குண்டின் சிதறல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த விடயத்தை அதிகாரிகள் தமது கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளார்கள். கப்பலில் வந்த மற்றொரு பெண் தனது கணவரின் சிறுநீரகத்தில் ஷெல் துண்டுகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சம்பவங்கள் அகதிநிலை கூறி வந்துள்ள மக்கள் போர் இடம்பெற்ற பகுதிகளிலோ அல்லது அதற்கு அருகாமையிலேயோ இருந்திருப்பதை நிரூபிக்கின்றன.
இன்னும் ஏராளமான இப்படியான துயரச் சம்பவங்கள் தொடர்ச்சியான விசாரணையின் மூலம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விடயங்களை கனடியத் தமிழர் பேரவையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.