பக்கங்கள்

03 ஆகஸ்ட் 2010

வெட்டுக்காயங்களுடன் பொலிஸ்காரரின் சடலம்.


வெட்டுக் காயங்களுடன் பொலிஸ் சார்ஜண்ட் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. கொழும்பு கொலொன்னாவைப் பகுதியிலிருந்து இவரது சடல்ம் கண்டெடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இன்று காலை பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலொன்றுக்கு அமைய கொலொன்னாவை ஐ. டி. எச் பிரதேசக் கால்வாய் ஒன்றின் அருகிலிருந்து இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.சடலத்தினருகே கையடக்கத் தொலைபேசியொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பொலிஸ் சார்ஜண்ட், பன்னலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவரெனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் (பொலிஸ் அத்தியட்சகர்) பிரிசாந்த ஜயகொடி தெரிவித்தார். நேற்று மாலை கடமையை முடித்துக் கொண்டு பொலிஸ் நிலையத்திலிருந்து அவர் வெளியேறிச் சென்றிருந்தார் எனக் கூறப்படுகிறது. அவர் எவ்வாறு கொலைசெய்யப்பட்டார் என்ற விசாரணைகளை பொலிசார் முடிக்கிவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.