பக்கங்கள்

04 ஆகஸ்ட் 2010

மேர்வினால் தண்டிக்கப்பட்ட உத்தியோகஸ்தர் தலைமறைவு.

பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவால் நேற்று மரத்தில் கட்டிப் போடப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்,அவரின் குடும்பத்தினர் சகிதம் காணாமல் போய் உள்ளார்.
அவர்கள் உயிராபத்துக் கருதி வீட்டை விட்டு வேறு எங்கோ சென்று மறைந்திருக்கின்றார்கள் என்று அந்த உத்தியோகத்தரின் உறவினர்கள் நம்புகின்றார்கள்.
நேற்று நடந்த அந்தச் சம்பவத்தால் சமுர்த்தி உத்தியோகத்தர் மிகவும் மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கின்றார் என்றும் அவர் எந்தவொரு தவறும் செய்திராத நிலையில் தண்டிக்கப்பட்டு இருக்கின்றார் என்றும் அவரின் உறவினர்கள் குறிப்பிட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.