பக்கங்கள்

25 ஆகஸ்ட் 2010

பேச்சை மாற்றிய மகிந்த,அதிர்ச்சியில் ரணில்.



சிறீலங்கா ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சி தலைவர் ரணி;ல் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடந்த திங்கட்கிழமையன்று மூன்றாவது முறையாகவும் சந்திப்பு இடம்பெற்றது.
ஏற்கனவே நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டிருந்தது.
எனினும் இதற்கு ஜனாதிபதி இதற்கு இணங்கவில்லையெனவும் திங்கட் கிழமை சந்திப்பின்போது ஏற்கனவே ஏற்றுக் கொண்டதை இப்போது மாற்றியுள்ளதாகவும் தாம் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக வருவதற்கு உதவவேண்டும் என ஜனாதிபதி ரணிலிடம் கோரியதாகவும் அப்போது ரணில் விக்கிரமசிங்க அதிர்ச்சிக்குள்ளானதாகவும் அவர் எந்தக்கருத்தையும் வெளியிடவில்லை என ஐக்கிய தேசியக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.