பக்கங்கள்

11 ஆகஸ்ட் 2010

யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைக்கு வலியுறுத்துமாறு அமெ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை.




சிறீலங்காவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்த சுயாதீன அனைத்துலக விசாரணைகள் அவசியம் என அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் பராக் ஓபாமாவை வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்த சுயாதீனமான அனைத்துலக விசாரணைகள் அவசியம் என்பதை வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்; அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் கிலாரி கிளிங்டனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
சிறீலங்கா அரசு உருவாக்கியுள்ள குழு நம்பகத்தன்மை அற்றது. அது போர்க்குற்ற விசாரணைகளை தாமதப்படுத்துவதுடன், பல சந்தர்ப்பங்களில் இந்த குழுவின் செயற்பாடுகள் மீது அரசின் தலையீடுகளும் இருந்துள்ளன.
போரின் போது இரு தரப்பினரும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உண்டு. எனவே சிறீலங்காவில் நடைபெற்ற இறுதிப்போரில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சுயாதீனமான முழு விசாரணைகள் அவசியம் என அவர்கள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 9 ஆம் நாள் அனுப்பப்பட்ட இந்த கடிதத்தில் 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.