பக்கங்கள்

23 ஆகஸ்ட் 2010

இரவு நேரத்தில் கதவைத் தட்டி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் படையினர்!



மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை அந்தோனியார் புற கிராம மக்கள் அப்பகுதியில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினரால் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக அம் மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
மேற்படி கிராமத்தில் இதுவரை 450 குடும்பத்தினர் மீள் குடியேற்றம் செயப்பட்டுள்ளனர். அந்தக் கிராமமானது 212 வது இராணுவ படைப்பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இக்கிராமங்களில் இரவு நேரங்களில் பெண்கள் தனியாக உள்ள வீடுகளுக்குச் செல்லும் படையினர் பாலியல் சேட்டை புரிவதற்கு வீட்டுக் கதவை தட்டுதல், திடீர் சோதனை என்ற பெயரில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைதல் போன்ற செயற்பாடுகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதால் நிம்மதியாக இரவில் நித்திரை கொள்ள முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் விரக்தியுடன் தெரிவிக்கின்றனர்.
அந்த இடங்களுக்கு மேஜர் விஜயரட்ன என்னும் இராணுவ அதிகாரி பொறுப்பாக இருக்கிறார்.அவரிடம் இந்த விடயம் தொடர்பாக அம்மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ் வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அப் பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.