பக்கங்கள்

16 ஆகஸ்ட் 2010

எம்.வி.சன்.சியில் இரு வாரங்களுக்குமுன் ஈழ இளைஞன் மரணம்,கடலில் சடலம் அடக்கம்!



எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவுக்கு புறப்பட்டு இருந்த ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் இக்கடற்பயணத்தின்போது இரு வாரங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார். 37 வயது உடைய இளைஞர் ஒருவரே கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்தார். ஆயினும் இவரின் மரணத்துக்கான காரணம் தெரியாமல் உள்ளது. சடலம் கடலில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் மனைவியும், ஒரு குழந்தையும் இலங்கையில் இருக்கின்றார்கள்.
கனேடிய தமிழ் பேரவையின் பேச்சாளர் மஞ்சுளா செல்வராசா கப்பலில் வந்திருந்த தமிழர்களை நேரில் சந்தித்துப் பேசினார். அவரை மேற்கோள் காட்டியே கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதே நேரம் இந்த ஈழ அகதிகள் கனேடியர்களின் உதவியைப் பெற்றுக்கொண்டுதான் புறப்பட்டு வந்து சேர்ந்தார்களா? என்கிற கோணத்திலும் கனேடிய புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.