பக்கங்கள்

10 ஆகஸ்ட் 2010

இத்தாலியிலிருந்து இலங்கை சென்ற யுவதி வெள்ளை வான் கும்பலினால் கடத்தல்!



அண்மையில் இத்தாலியிலிருந்து இலங்கைக்குச் சென்ற யுவதி ஒருவர் வெள்ளை வான் கும்பலினால் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வென்னப்புவ வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான அனுஷீகா மிலானி பீரிஸ் என்ற யுவதியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த யுவதி ஆறு நாட்களுக்கு முன்னர் இத்தாலியிலிருந்து இலங்கை சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் தேவாலயமொன்றிற்கு அருகாமையில் இருந்த போது வெள்ளை வான் கும்பலினால் குறித்த பெண் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வான் கொழும்புப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானதென விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.