பக்கங்கள்

07 ஆகஸ்ட் 2010

நாம் தமிழர் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம்.



புதுக்கோட்டையில் மீனவர்கள் படுகொலையை கண்டித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் பொதுக்கூட்டத்தில் நடைபெறுகிறது.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த கைதுக்கான முதல் கண்டன பொதுக்கூட்டத்தை புதுக்கோட்டையில் நடத்துவது என, நாம் தமிழர் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் அறிவித்திருந்தனர். அதன்படி ஈழத்தமிழர்கள் ஆதரவு தலைவர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர். ஆனால் இதில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் கலந்து கொண்டு பேசுவதாக, சில நாட்களுக்கு முன்பு சிறையில் சீமானை சந்தித்து ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணி அளவில், புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. சீமான் கைதை கண்டித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தை மீனவர் தாக்கப்படுவதை கண்டித்து, கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
கூட்டத்தில் திருச்சி வேலுச்சாமி மற்றும் நாம் தமிழர் இயக்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.