பக்கங்கள்

22 ஆகஸ்ட் 2010

தமிழகத் தமிழர்களை குழப்ப கே,பி,மூலம் சதி செய்யும் சிங்கள அரசு.



சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கே.பி.யின் மூலம் புலம்பெயர் தமிழர்களை குழப்பிய சிறீலங்கா அரசானது அடுத்தப்படியாக கேபியின் மூலம் தமிழகத்தமிழர்களை குறிவைத்துள்ளது.
இது தொடர்பாக சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கே.பி. அளித்து ள்ள பேட்டி:
தமிழகத்தின் ம.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வை.கோவின் நடவடிக்கைகளினால் இறுதி நேரத்தில் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் போனதாக சிறீலங்காவின் கட்டுப்பாட்டிலுள்ள குமரன் பத்மநாதன் அறிவித்துள்ளார்.
இந்திய மத்திய அரசாங்கம் போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்த முனைப்பு காட்டிய போதிலும், வை.கோ அந்த யோசனைத் திட்டத்தை நிராகரித்தார் என கேபி குற்றம் சாட்டினார்.
போர் உச்சக் கட்டத்தை அடைந்த சந்தர்ப்பத்தில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பானா பா.நடேசன் இந்தியாவின் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாக குமரன் பத்மநாதன் மேலும் தெரிவித்தார்.
அரசியல் தீர்வினை ஏற்றுக்கொள்ளல் மற்றும் ஆயுதங்களை களைந்து சரணடைதல் ஆகிய கோரிக்கைகளுக்கு உடன்பட்டால் போர்நிறுத்தத்தை அமுல்படுத்த முடியும் என இந்தியா அறிவித்திருந்ததாகவும் இப்போது சிறீலங்காவின் கட்டுப்பாட்டிலுள்ள குமரன் பத்மநாதன் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் இறுதி நேரத்தில் ஒத்துழைக்கவில்லை என சிறீலங்காவின் கட்டுப்பாட்டிலுள்ள குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.