பக்கங்கள்

04 ஆகஸ்ட் 2010

சீமான் வழக்கு,பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு.


நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது குறித்து, 6 வாரத்தில் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக கைது செய்யப்பட்டார். பின்னர் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை எதிர்த்து சீமான் சார்பில் அவரது சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் நாகப்பன், சிவக்குமார் ஆகியோரது முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சீமான் சார்பில் மூத்த வக்கீல் நடராஜன் ஆஜராகி வாதாடினார். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் மட்டுமே உத்தர விட முடியும். ஆனால் சீமானுக்கு கூடுதல் கமிஷனர் உத்தர விட்டுள்ளார். மேலும், சட்ட விரோத தடுப்பு சட்டம் குறித்த அரசு ஆணை காலாவதியாகி விட்டது. எனவே, அரசின் உத்தரவு செல்லாது என வாதிட்டார். இதையடுத்து 6 வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்கு மாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.