பக்கங்கள்

23 ஆகஸ்ட் 2010

சரத் பொன்சேகாவிற்கு எதிரான இரண்டாவது யுத்த நீதிமன்ற விசாரணைகள் இன்று ஆரம்பம்.



முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு எதிரான இரண்டாவது யுத்த நீதிமன்ற விசாரணைகள் இராணுவத் தலைமையகத்தில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் நடத்தப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார்.
இராணுவத்திற்காக ஆயுதங்களை கொள்வனவு செய்த போது சரத் பொன்சேகா ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஊழல் மோசடி தொடர்பில் இன்றைய தினம் சிலரிடம் சாட்சியங்கள் பதியப்பட உள்ளதாக தெரியவருகிறது.
இராணுவம் யுத்த நீதிமன்றின் தலைவராக மேஜர் ஜெனரல் எம்.ஜீ.பீரிஸ் கடமையாற்றுகின்றார். இலங்கையில் தனக்கு நியாயம் கிடைக்காது என சரத் பொனசேகா அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.