பக்கங்கள்

04 ஆகஸ்ட் 2010

அதிகரித்து செல்லும் சிறிலங்கா அமைச்சர்களின் வன்முறை.


சிறீலங்கா அரசின் அமைச்சர்களின் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளை அவர்களின் அலுவலகத்திற்குள் சிறைவைத்த அமைச்சர் விமல் வீரவனசாவின் அராஜகம் அடக்கும் முன்னர், மற்றுமெரு பிரதி அமைச்சரான மேர்வின் சில்வா சமுர்த்தி அலுவலகர் ஒருவரை பொதுமக்கள் முன்னிலையில் மரத்தில் கட்டிவைத்து தனது வன்முறையை அரங்கேற்றியுள்ளார்.
உலகில் மிகவும் வன்முறை மிக்க நாடாக மாற்றம் பெற்றுவரும் சிறீலங்காவில் தினம் தினம் புதிய புதிய வடிவங்களில் வன்முறைகள் அரங்கேறி வருகின்றன.
கடந்த வாரம் களனியில் நடைபெற்ற டெங்கு தடுப்பு நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளத் தவறிய சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவரை பிரதியமைச்சர் மேர்வின் சில்வா நேற்று (3) பிற்பகல் மா மரமொன்றில் கட்டி வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் சமுர்த்தி அதிகாரியொருவரை மரத்தில் கட்டிவைத்த பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும்வரை நாடாளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டங்களில் பங்குபற்றாதிருப்பதற்கு சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
சமுர்த்தி அதிகாரசபையுடன் இணைந்த அனைத்துச் சங்கங்களும் இந்த புறக்கணிப்புக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் நிஷாந்த உடவத்த தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.