பக்கங்கள்

31 ஜூலை 2010

மூவாயிரம் போராளிகள் விடுதலையாம்!


அரச படையினரிடம் சரண் அடைந்தோரில் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 3000 பேர் வரையானோர் இது வரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.


அத்துடன சரணடைந்த முன்னாள் போராளிகள் 11698 பேர் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


விடுதலை செய்யப்பட்டிருக்கும் 3000 பேரில் பல்கலைக்கழக மாணவர்கள்,சிறுவர்கள்,ஊனமுற்றோர்கள்,கர்ப்பிணிப் பெண்கள், இளம்தாய்மார்கள்,சிறு குற்றங்களைச் செய்தவர்கள், நீதிமன்றால் நிரபராதிகளென விடுவிக்கப்பட்டவர்கள் ஆகியோர் அடங்குவர் என்று அவர் பட்டியல் போட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.