பக்கங்கள்

06 ஆகஸ்ட் 2010

இன்று 06-08-2010 லண்டனில் பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் தமிழ் பாடசாலைகளுடனான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது.


இன்று 06-08-2010 லண்டனில் பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் தமிழ் பாடசாலைகளுடனான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது.
வடமேற்கு லண்டன் பகுதியில் உள்ள பிறண்ட் ரவுண் ஹோலில் இடம்பெறவுள்ள இந்த பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் தமிழ் பாடசாலைகளுடன் சந்திப்பொன்றை ஏற்பாடுசெய்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கல்வி, விளையாட்டுத்துறை மற்றும், கலைபண்பாட்டுக் குழுவினதும், நிதிக்குழுவினதும் பிரதிநிதிகளில் ஒருவரான திருமதி. லலிதசொரூபினி பிரதீபராஜ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் புலம்பெயர் மக்களின் கல்வித்துறையை மேம்படுத்துவது, மற்றும் புலத்தில் உள்ள எம் உறவுகளில் கல்விக்காக ஏங்கும் மாணவ சமூகத்திற்கு எவ்வாறு உதவிகள் செய்து அவர்களின் கல்வித்துறையை மேம்படுத்துவது போன்ற விடையங்கள் பேசப்படவுல்ளதாகவும், அது தொடர்பாக அனுபவமுள்ளவர்களான பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், தமிழ்பாடசாலை பிரதிநிதிகள் மற்றும் கல்விமாங்கள், மாணவர்கள் என அனைவரிடமும் ஆலோசனைகளயும், கருத்துக்களையும் கேட்டறிந்து அனைவரும் புரிந்துணர்வோடு ஒன்றிணைந்து செயற்பட இந்த ஒன்றுகூடல் வழிசமைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்த ஒன்றுகூடலில் கலந்துகொள்ள பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், தமிழ்பாடசாலை பிரதிநிதிகள், கல்விமாங்கள், மற்றும் மாணவர்களை வந்து கலந்துகொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஒன்றுகூடல் இடம்பெறும் இடம்:
CHAMBER HOUSE,Brent Town Hall,Forty Lane, Wembley, HA9 9BR
காலம்: 06-08-2010 Friday
நேரம்: 7:00pm – 9:3pm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.