பக்கங்கள்

02 ஆகஸ்ட் 2010

போராளிகளை இல்லாதொழிக்க சிங்கள அரசு முயற்சி.





இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் 1,350 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையதான குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே இவர்களுக்கு எதிரான வழக்குகள் தொடரப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இவ்வாறு வழக்கு தொடர்வதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 650பேர் வவுனியா தடுப்பு முகாமிலும் ஏனைய 700பேரும் காலி, பூஸா முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறித்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.இதேவேளை இராணுவத்திடம் நூற்றுக்கணக்கான போராளிகள் சரணடைந்த போதிலும் அவர்கள் குறித்த விபரங்கள் எதுவும் எந்தப் பதிவிலும் இல்லை என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் மக்களிடம் தெரிவித்திருகின்றனர். சரணடைந்தவர்களையும் உறவுகளைத் தேடுவோரையும் தொடர்புபடுத்தும் நடவடிக்கையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபட்டுவருகின்றமை தெரிந்ததே. இதன் அடிப்படையில் செஞ்சிலுவைச் சங்கத்தினரை நாடிய நூற்றுக்கணக்கான போராளிகளின் உறவினர்கள், போராளிகள் எந்த இடத்தில் இராணுவத்திடம் சரணைந்தனர் என்ற விபரங்களை வழங்கி அவர்கள் குறித்த தகவல்களைப் பெற்றுத் தருமாறு கேட்டிருந்தனர்.குறித்த விபரங்களைக் கொண்டு தேடுதல் நடத்திய செஞ்சிலுவைச்சங்கம், அவர்கள் பற்றிய விபரங்கள் எந்தப் பதிவிலும் இல்லை என இராணுவத் தரப்புத் தெரிவித்ததாக மக்களுக்கு கூறியுள்ளது. ஏற்கனவே சில ஆயிரம் போராளிகளை விடுதலை செய்துள்ள இராணுவம் தற்போது நீதிமன்றத்திற்கு 1,350 போராளிகளைக் கொண்டு செல்லவுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சர்வதேசத்திற்கு முன்பாக தம்மை நியாயப்படுத்த முற்படும் அரசு மறுபக்கத்தில் ஏனைய போராளிகளை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க முனைவதை உணர முடிவதாக பொன்சேகாவிற்கு நெருக்கமான பெயர் குறிப்பிட விரும்பாத பழ அரனடைந்த தெரிவித்திருக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.