பக்கங்கள்

10 ஆகஸ்ட் 2010

மேர்வின் சில்வா பதவி நீக்கப்பட்டார்.



பிரதியமைச்சர் மேர்வின் சில்வா அரசாங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேர்வின் சில்வா தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணையொன்றின் பின்னர் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சற்றுமுன் அறிவித்துள்ளது.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டெங்கு ஒழிப்பு நிகழ்வில் பங்குபற்றாத சமுர்த்தி ஊழியர் ஒருவரை மேர்வின் சில்வா கடந்தவாரம் மரத்தில் கட்டிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு எதிராக நாடெங்கிலும் சமுர்த்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மேர்வின் சில்வாவுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்தை அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.