பக்கங்கள்

29 ஆகஸ்ட் 2010

எனது மார்பில் இராணுவத்தினர் சிகரெட்டால் சுட்டனர் - கனடா சென்றுள்ள பெண்.


கடந்த 13 ஆம் திகதி வன்கூவரை அடைந்துள்ள எம்.வி சன் சீ கப்பலில் சென்ற அகதிகளுக்கான விசாரணையை கனேடிய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். இவர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட்ட பெண்ணொருவர் இலங்கை இராணுவத்தினர் தமக்கு செய்த சித்திரவதைகளை வெளித்தெரிவித்துள்ளார். தமது கணவரை இராணுவத்தினரே சுட்டுக்கொன்றனர் எனத் தெரிவித்த அவர், தமது மார்பில் இலங்கை இராணுவத்தினர் சிகரெட்டுகளால் சூடு வைத்தனர் எனத் தெரிவித்தார். இப்பெண்மணியின் கணவர் எப்போது கொல்லப்பட்டார் என்பது பற்றியோ இச்சித்திரவதைகள் எப்போது நடந்தன என்பது பற்றியோ குறிப்பிடப்படவில்லை.
இப்பெண்மணி சார்பில் மாலினி டயொனிசியஸ் என்ற சட்டத்தரணி ஆஜராகி இருந்தார். குறித்த பெண்மணி தமக்கு நேர்ந்த அவலங்களைக் கூறியபோது, சட்டத்தரணி அவர்கள் அவற்றை மொழிபெயர்த்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். மேலும், சித்திரவதைகளுக்கு உள்ளான இப்பெண்மணி ஒரு ஆஸ்த்மா நோயாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.