பக்கங்கள்

09 ஆகஸ்ட் 2010

செய் அல்லது செத்துமடி-வைகோ பேச்சு.



ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்தில் புத்தகத்திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவின் சிறப்பு நிகழ்ச்சிக்கு கணேசமூர்த்தி எம்.பி.தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு ’எழுத்து எனும் கருவறை’ என்ற தலைப்பில் பேசினார்.
அவர், ‘’தமிழர்களின் எழுத்துக்களால் மறுமலர்ச்சி ஏற்பட்டது. சாக்ரடீஸ் சாதிக்க முடியாததைதந்தை பெரியார் எழுத்தில் சாதித்தார். நூல்கள் சமூகமாற்றத் திற்கும் மனிதநேயத்திற்கும் பயன்பட்டிருக்கிறது.
எழுத்துக்கள் வீர உணர்ச்சியை தட்டி எழுப்பும். நூல்கள் மிகப்பெரிய சக்தி. வால்டர், ரூசோ போன்ற அறிஞர்களின் நூல்கள் விடுதலை பற்றிய தாக்கத்தை ஏற்படுத்தின. ராபர்ட் பேன்ஸ் என்ற கவிஞனின் செய் அல்லது செத்துமடி என்ற கவிதை தொகுப்பு தான் ஸ்காட்லாந்து விடுதலைக்கு வித்திட்டது. போர்க்களத்தில் வீரன் சிந்தும் ரத்தத்தை விட அறிஞனின் பேனா மை புனிதமானது. காரல் மார்க்ஸ் முதலாளித்துவம் என்ற புத்தகத்தை எழுதும்போது வறுமையில் வாடினார். இன்றும் எழுத்தாளர்கள் வறுமையில் வாடிக்கொண்டு இருக்கின்றனர்.
அவர்கள் தங்கள் குடும்பத்திற்காக வாழவில்லை. வருங்கால சந்ததிக்காக வாழ்கின்றனர். காரல்மார்க்ஸ் போன்ற மாமேதைகளின் புத்தகங்களை படிக்கும்போது நம்பிக்கை பிறக்கும்’’என்று பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.