பக்கங்கள்

05 ஆகஸ்ட் 2010

சென்னையில் நாளை மாலை 5.30 மணிக்கு கருத்துரிமை களம் என்ற அமைப்பு சார்பில் மாபெரும் மக்கள் எழுச்சி பொதுக்கூட்டம் நடக்கவிருக்கிறது.



தமிழர்களின் கருத்து சுதந்திரத்தை மறுப்பதற்கும் இலங்கை இனவெறி அரசால் நடத்தப்பெற்ற போர் குற்றங்களை மறைக்கவும் முழுவீச்சாக இறங்கியிருக்கும் அரசை கண்டிக்கும் மக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் இணைகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புரசைவாக்கம் தாணா தெருவில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் நல்லக்கண்ணு தலைமையேற்கிறார். புலவர் புலமைபித்தன் முன்னிலை வகிக்கிறார்.
தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் தொடக்க உரையாற்றுக்கிறார்.
கொளத்தூர் மணி, தமிழருவி மணியன், பழ.கருப்பையா, டாக்டர் கே.கிருஷ்ணசாமி, ப.அப்துல்சமது, சி.மகேந்திரன், பெ.மணியரசன், தீரன், தியாகு, அஜிதா ஆகியோர் பல்வேறு தீர்மானங்களை முன்வைக்கின்றனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தீர்மானங்களை நிறைவேற்றக்கோருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.