பக்கங்கள்

09 ஆகஸ்ட் 2010

பிரபா கணேசன் எம்.பி யின் தலையெழுத்து?



அரசுடன் இணைந்திருக்கும் பிரபா கணேசன் எம்.பி அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருக்கின்றார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இவர் எவருடனும் அரசின் முன் அனுமதி பெறாமல் தொடர்பு கொள்ள முடியாத வகையில் உள்ளார் என்று அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிலும் இவர் ஜனநாயக மக்கள் சுதந்திர முன்னணியினருடன் தொடர்பு கொள்ள முடியாத வகையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார் என்றும் அச்செய்திகள் கூறுகின்றன.
பிரதி அமைச்சர் டிலான் பெரேராவின் கட்டுப்பாட்டில் இவர் வைக்கப்பட்டிருக்கின்றார் என்று இச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று மாலை இவர் ஜனநாயக மக்கள் சுதந்திர முன்னணியினரைச் சந்திக்க இருந்தார் என்றும் ஆனால் இச்சந்திப்பு தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது என்றும் ஒரு ஊடகவியலாளர் பிரபாவின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தபோது மறுமுனையில் டிலான் பெரேராவே பேசினார் என்றும் இச்செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.