பக்கங்கள்

11 ஆகஸ்ட் 2010

சிங்கப்பூரில் விபச்சாரத்துக்காக இலங்கைச் சிறுமிகள் விற்பனை.



சிங்கப்பூரில் நடக்கும் நடனக் கச்சேரிக்காகக் கொண்டு செல்வதாகக் கூறி அங்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைச் சிறுமிகள் விபச்சாரத்துக்காக விற்கப்படுவதாக இலங்கை குற்றப் புலனாய்வுப் போலீசார் கண்டுபிடித்துள்ளனராம். இந்த விவகாரம் குறித்து கொழும்பு குற்றவியல் நீதிமன்றத்திற்குப் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரிலுள்ள இலங்கைத் தூதரகம் கொடுத்த ஒரு முறைப்பாட்டினை அடுத்தே போலீசார் இந்த விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.விசாரணைகள் மூலம் ஒரு சந்தேக நபரைத் தாம் கைது செய்துள்ளதாக நீதிமன்றில் கூறியுள்ள போலீசார், இந்நபர் விபச்சாரத்துக்காகச் சிறுமிகளை தலா 50 டொலர் பெற்றுக்கொண்டு சிங்கப்பூரில் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளதாகக் கூறினர். இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள பிற நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் தற்போது போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.