பக்கங்கள்

17 ஆகஸ்ட் 2010

ஐ.நா.நோக்கி அணிதிரளுங்கள் மக்களே: ஜெயானந்தமூர்த்தி.



ஐ.நாவை நோக்கி மனிதநேய நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தனின் உணர்வுபூர்வமான உறுதிமிக்க போராட்டத்தின் இறுதிநாள் நிகழ்வில் ஐரோப்பிய புலம் பெயர் தமிழ் உறவுகள் பெருமளவில் கலந்து கொள்வதன் மூலம் எமது ஒற்றுமையையும் பலத்தையும் மீண்டும் சர்வதேசத்திற்கும் சிறிலங்கா அரசுக்கும் காண்பிக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் லண்டன் பிரதிநிதியுமான எஸ்.nஐயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். சர்வதேச செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.'இன்று எமது புலம் பெயர் தமிழ் மக்கள் சற்று சோர்ந்துபோன நிலையில் உள்ளனர். இதற்கு புலம் பெயர் நாடுகளில் உள்ள ஒரு சிலரின் நடவடிக்கைகளும் காரணமாக உள்ளன. முன்பு விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சிலர் தற்போது சிறிலங்கா அரசுடனும் சிறிலங்கா அரசின் பாதுகாப்பில் இருப்போருடனும் தொடர்புகளைப் பேணி வருகின்றனர். இது அவர்களின் சுயலாப நோக்காக இருக்கலாம். அது மாத்திரமின்றி புலம் பெயர் நாடுகளில் சில குழு நிலை வாதங்களும் காணப்படுகின்றன. இதனால் மக்கள் மத்தியில் சில குழப்பங்கள் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான குழப்பங்களை நாம் சந்தித்தே தீரவேண்டும். இதன் மூலம்தான் நாம் எமக்கு எதிரான சக்திகளை இனங்காண முடியும். எமது தேசியத் தலைவர் எமக்கிட்ட பணிகளையும் கட்டளைகளையும் அவர் அமைதிகாக்கும் இவ்வேளையில் நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். அவர் போராட்டத்தை புலம் பெயர் தேசத்திற்கு நகர்த்தியதை நாம் மறந்துவிட முடியாது. எனவே மக்கள் இந்நிலையில் விழிப்பாக இருக்க வேண்டும். எமது உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். இந்நிலையில்தான் சிவந்தனின் மனித நேய நடைப்பயணம் ஆரம்பிக்கப்பட்டது. எமது மக்கள் மீண்டும் பலத்துடன் நிமிர்ந்தெழ சிவந்தன் வழிசமைத்துள்ளார். உயிரைப் பணயம் வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்நடைப்பயணம் எதிர்வரும் 20 ஆம் நாள் nஐனிவாவில் ஐ.நா. மன்றத்திற்கு முன்னால் முடிவடைவதுடன் அங்கு எழுச்சி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இவ் எழுச்சி நிகழ்வில் எமது மக்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எமது உறுதி, ஒற்றமை, பலம் என்பனவற்றை மீண்டும் நாம் சர்வதேசத்திற்கும் சிறிலங்கா அரசுக்கும் காண்விக்க முடியும். முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் பின் புலம் பெயர் மக்கள் பலமிழந்து விட்டார்கள், ஒற்றுமையின்றி உள்ளனர் என நினைத்திருக்கும் சிறிலங்கா அரசுக்கு ஓங்கி முகத்தில் அறைவதுபோன்று இந்நிகழ்வு அமைய வேண்டும். எனவே எமது பலத்தையும் ஒற்றுமையையும் ஐ.நாவுக்கு முன்னால் மீண்டும் நாம் நிருபித்துக் காட்ட வேண்டும்' என தெரிவித்துள்ள nஐயானந்தமூர்த்தியிடம் நாடு கடந்த அரசாங்கம் பற்றிக் கேட்டபோது 'நாடுகடந்த அரசாங்கம் தற்போதும் ஒரு குறைப்பிரவசம்போன்றே உள்ளது. அது இன்னமும் முழுமையடையவில்லை. தேர்தல் முடிவடைந்து முதலாவது அமர்வு நடந்து மூன்று மாதங்கள் முடிவடையும் நிலையில் இன்னமும் முன்னேற்றமில்லை என்பதே உண்மை. என்னைப் பொறுத்த வரையில் என்னை மக்களே வேட்பாளராக நிறுத்தினார்கள் அதுபோன்று மக்களே தெரிவும் செய்தனர். இதில் நான் போட்டியிடாவிட்டிருந்தாலும் எனக்கென்றொரு தளம் உள்ளது. அதிலிருந்து நான் மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்யமுடியும். கடந்த காலங்களில் போராட்டத்திற்கு என புலம் பெயர் நாடுகளில் ஆதரவு தெரிவிக்காத மற்றும் எந்தவொரு போராட்டத்திலும் கலந்து கொள்ளாத ஒரு சிலர் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் வெளியே வந்துள்ளனர். இவர்களே மக்களுக்கு இன்று அரசியல் செய்கின்றனர்' என்று தெரிவித்துள்ளார் எஸ்.ஜெயானந்தமூர்த்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.