பக்கங்கள்

06 ஆகஸ்ட் 2010

தனது இரு பிள்ளைகளுக்கு நஞ்சூட்டி தானும் தற்கொலை முயற்சி; சிறுமி பலி!



தனது இரு பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டிய தாயொருவர் தானும் நஞ்சை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று நாவுல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மடவல பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த கோரச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
நஞ்சூட்டப்பட்ட நிலையில் இருந்த ஒரு பிள்ளை உயிரிழந்ததுடன் மற்றைய பிள்ளையும் தாயும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் போது 5 வயதான ரோஜா என்ற தமிழ் சிறுமியொருவரே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 10 வயதுடைய சிறுவன் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கான காரணம் உடனடியாகத் தெரிய வரவில்லை என்று கூறிய பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி, இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.