பக்கங்கள்

31 ஆகஸ்ட் 2010

மேர்வின் சுற்றவாளியாம்?


பெருந்தெருக்கள் பிரதியமைச்சராக இருந்த மேர்வின் சில்வா குற்றம் எதையும் இழைத்து இருக்கவில்லை என்று அவரை விசாரித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று விசாரணைக் குழு அறிவித்துள்ளது.
டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தில் கலந்து கொள்ளத் தவறிய சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மேர்வின் சில்வா மாமரம் ஒன்றில் கட்டிப் போட்டார் என்கிற குற்றச்சாட்டு தொடர்பாகவே இவ்விசாரணை இடம்பெற்றது.
கட்சித் தலைவருமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தரவின் பேரிலேயே இவ்விசாரணை நடத்தப்பட்டது இவ்விசாரணையின் முடிவில் மேர்வின் நிரபராதி என்றும் சுய விருப்பின் பேரில் சமுர்த்தி உத்தியோகத்தர் சுயமாகவே மரத்தில் கயிற்றால் கட்டிக் கொண்டார் என்றும் ஒழுக்காற்றுக் குழு முடிவுக்கு வந்துள்ளது.
அச்சமுர்த்தி உத்தியோகத்தர் இவ்வாறுதான் விசாரணைக் குழுவுக்கு தெரிவித்துள்ளார் என்றும் தெரிய வருகிறது. ஒழுக்காற்றுக் குழுவின் விசாரணை அறிக்கை ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.