பக்கங்கள்

08 ஆகஸ்ட் 2010

காஸ்ட்ரோவைப்போலத்தான் சீமானைப்பார்க்கிறோம்: ம.நடராஜன்.



இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த கைதுக்கான முதல் கண்டன பொதுக்கூட்டத்தை புதுக்கோட்டையில் நடத்துவது என, நாம் தமிழர் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று மாலை மாலை 7 மணி அளவில், புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் திறந்த மேடையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மேடையில் தேசியத்தலைவர் வே.பிரபாகரன், சீமான், எம்.நடராஜன் படங்கள் வைக்கப்படிருந்தன. புதிய பார்வை ஆசிரியர் நடராஜன், திருச்சி வேலுச்சாமி மற்றும் நாம் தமிழர் இயக்கத்தின் நிர்வாகிகள் இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்திற்கு இரவு 8.30மணி வரைதான் காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் 9.45க்குத்தான் கூட்டம் முடிந்தது.
கூட்டத்தில் சசிகலா கணவர் எம்.நடராஜன், ”அண்ணா கண்ட ஆட்சியில்தான் சீமானுக்கு சிறை வெட்கமாக இருக்கிறது. சீமான் எதற்காக போராட்டம் நடத்தினார். தொடர்ந்து தாக்கப்படுவது நம் மீனவன் என்றுதானே போராட்டம் நடத்தினார். இது தவறா? அன்றே ஆர்ப்பாட்டம் செய்த எங்களையும் (வைகோ,நெடுமாறன், நடராஜன்) கைது செய்தார்கள்.
கடலூரில் அடைத்தார்கள். வெளியில் கூட்டத்தில் பேசக்கூடாது என்றுதான் எங்களை சிறையில் அடைத்தார்கள். வெளியில் பேசத்தானே நேரம் இல்லையென்று உள்ளேயே கூட்டத்தை நடத்தினோம். நிறைய பேசினோம். இதை பொறுக்க முடியாமல் எங்களை விடுதலை செய்துவிட்டார்கள்.
எங்களை விடுதலை செய்ததால் சிறை அதிகாரிகளையும் மாற்றிவிட்டார்கள். நாங்கள் கூட்டாக இருந்தோம் வெளியேறிவிட்டோம். ஆனால் சீமான் தனியாக இருக்கிறார். அதனால்தான் அவர் தனிமைச்சிறையில் சிறைப்பட்டுவிட்டார். நாங்கள் சீமானைச்சென்று பார்த்தபோது, இன்னமும் அவர் தளர்ந்து போகவில்லை. அஞ்சாநெஞ்சனாகத்தான் இருப்பதை பார்த்தோம்.
நிமிர்ந்து நிற்கிறார் சீமான். கியூபா விடுதலைக்காக போராடிய பிடல் காஸ்ட்ரோவைப்போலத்தான் சீமானைப்பார்க்கிறோம். சீமானை வெளியே கொண்டுவர சட்ட நுணுக்களை ஆராய்ந்து வருகிறோம். விரைவில் கொண்டுவருவோம். சீமானின் புகழ் வெளிநாடுகளிலும் பரவிக்கிடக்கிறது. உலகத்தின் கடைக்கோடி தமிழன் கூட தமிழனுக்காக போராடிய சீமானுக்காக பேசுகிறான்.
இன்னும் வெளியே இருப்பது திருச்சி வேலுச்சாமி மட்டும்தான். அவரையும் உள்ளே அனுப்ப உறுதி எடுத்துக்கொள்வோம். என்னையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே தள்ள ஆலோசனை நடந்துவருகிறது. என் மீது தே.பா.சட்டம் போட அவர்களுக்கு அச்சம். ஏன் அச்சம் என்பதும் அவர்களுக்கே தெரியும். என்னை எதையும் தாங்கும் இதயம் என்று கலைஞர் சொல்லியிருக்கிறார். அண்ணாவின் இயத்தை தாங்கிக்கொண்டிருந்த கலைஞர் அந்த இதயத்தை என்னிடம் கொடுத்திருப்பதில் மகிழ்கிறேன்”என்று பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.