பக்கங்கள்

22 ஆகஸ்ட் 2010

மீள் குடியேற்றப்பட்ட விதவைப்பெண்கள் பெரும் அவலத்தில்.



மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய மடு ஈச்சலவக்கை கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக இங்குள்ள விதவைக் குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். ஈச்சலவக்கை கிராமத்தில் தற்போது 88 குடும்பங்கள் மீள் குடியேறியுள்ளனர்.
அவர்களில் 35 விதவைக் குடும்பங்களும் உள்ளனர். இவர்களில் பலர் தற்காலிக கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களின் வருமானத்தை தேடிக் கொள்வதில் பெரும் அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
நடந்து முடிந்துள்ள போரினால் கணவனை இழந்து பிள்ளைகளை இழந்து பல மாதங்களாகியும் எந்தவித மீட்சியுமில்லாமல் இன்னமும் மீள வழியில்லாமல் தவிக்கிறார்கள்.
இவர்களில் பலர் உளவியல் ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 35 விதவைக் குடும்பங்களும் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் தங்களது ஒவ்வொரு நாள் வாழ்வையும் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தினமும் பட்டினியோடு நிரந்தர வருமானமும் இல்லாமல் தவிக்கும் தங்களை யாரும் கண்டு கொள்வதில்லை என்று குற்றம் சாட்டுகின்றார்கள். பல தரப்பில் இருந்தும் தம்மை வந்து பதிந்து கொண்டு செல்வதாகவும் ஆனால் தமக்கு எவ்வித உதவிகளும் செய்யவில்லை எனவும் அம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளமையால் தங்களது குடிசைகளும் ஒழுகுவதாக அம்மக்கள் மிகுந்த கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.