பக்கங்கள்

09 ஆகஸ்ட் 2010

14 வயதுச் சிறுமியின் தமிழ் உணர்வு!40 கிலோமீற்றர் வரை சலிக்காமல் நடை.



ஐ.நா . மனித உரிமைகள் சபையை நோக்கி புறப்பட்டிருக்கும் மனித நேய நடைப் பயணி சிவந்தனுடன் இணைந்து 14 வயதுச் சிறுமி ஒருவர் நேற்று 40 கிலோமீற்றர் தூரம் நடந்துள்ளார். நேற்று 70 இற்கும் மேற்பட்ட மக்கள் இவரோடு இணைந்து நடந்தனர்.
11 மணித்தியாலங்களில் 40 கிலோமீற்றர் நடந்திருந்தார்.குறிப்பாக சிவந்தனுடன் 14 வயதுச் சிறுமி ஒருவர் இந்த 40 கிலோமீற்றர் தூரம் வரை நடந்தார். சிவந்தன் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு உணவு எதுவும் உட்கொள்ளாமல் விரதம் இருந்தவாறே 17 ஆம் நாளாக ஐ.நா நோக்கிய பயணத்தை முன்னெடுக்கின்றார்.
கடந்த வருடம் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களில் சிவந்தனின் தந்தையும் அடங்குவார். இதனால் அவரது தந்தையையும் கொல்லப்பட்ட அத்தனை தந்தைமாரையும் நினைத்து இன்று நோன்பு இருந்தவாறே பயணிக்கின்றார் சிவந்தன்.
இன்று 8 பேர் இவருடன் இணைந்து நடக்கின்றார்கள். மேலும் சில பொதுமக்கள் இன்றும் இந்த மனிதநேய நடை பயணத்தில் இணைந்துகொள்ள இருக்கின்றனர். சிவந்தனுக்கு துணையாகச் செல்லும் இலக்கியன், பொஸ்கோ, ஹரி, வினோத், தினேஸ், ராஜ் போன்றவர்களும் அவ்வப்பொழுது கூடவே நடக்கின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.