பக்கங்கள்

23 ஆகஸ்ட் 2010

யாழ். மருத்துவ பீட மாணவன் சுன்னாகத்தில் சடலமாக மீட்பு!



யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பயிற்சி பெற்றுவரும் யாழ். மருத்துவபீடத்தின் 3ஆம் ஆண்டு மாணவனான சாரங்கன் சுன்னாகத்தில் கயிற்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் பயிற்சிக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் 7ஆம் இலக்க நோயாளர் விடுதியில் கடமையாற்றி வருகின்றார்.
குறித்த மாணவன் தாயாருடன் வாழ்ந்து வந்ததாகவும் தாயார் கடந்த சில நாள்களுக்கு முன்னர் வெளிநாட்டில் கல்வி கற்ற மற்றுமொரு சகோதரனின் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றுள்ள நிலையில் இவர் தனித்து வீட்டில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக குறித்த மாணவனின் நடமாட்டம் இல்லாததைக் கண்டு அவரது வீட்டிற்கு வந்த உறவினர்கள், வீட்டில் மின்விளக்குகள் எரிவதுடன் துர்நாற்றம் வீசுவதையும் உணர்ந்து கொண்டு வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது இவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டனர். மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தின் பணிப்புரைக்கமைய சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.