பக்கங்கள்

24 மார்ச் 2013

மகிந்த சொன்ன இரகசியத்தால் தலையில் அடித்து கதறிய கருணா!

அண்மையில் மட்டக்களப்புக்கு சென்ற மகிந்த ராசபக்ச கல்லடி பாலத்தை திறந்து வைத்து விட்டு அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் மகிந்த சொன்ன ஒரு விடயத்தை கேட்டு கருணா தலையில் அடித்து கதறியதாக அருகில் இருந்தவர்கள் கூறுகின்றனர். இருவரும் ஜெனிவா தீர்மானம் குறித்தும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை குறித்தும் பேசிக்கொண்டிருந்தனர். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச நீதிபதிகள் கொண்ட குழுவை நியமிப்பது தொடர்பாக ஐ.நா.சபை ஆராய்ந்து வருவதாக சர்வதேச நீதிமன்ற குழுவில் இருக்கும் இலங்கையின் முன்னைநாள் நீதியரசர் நிகால் ஜெயசிங்க அண்மையில் மகிந்தவை சந்தித்து தெரிவித்திருந்தார். பெரும்பாலும் சர்வதேச விசாரணையை சந்திக்க வேண்டி வரும். அதில் உம்மையும் பிரதானமாக விசாரிப்பார்கள் என மகிந்த கருணாவிடம் கூறிய போது கருணா தலையில் அடித்து கதறியதாக கூறப்படுகிறது இந்த தகவலை அருகில் இருந்த நம்பகமான நபர் ஒருவர் தினக்கதிருக்கு தெரிவித்தார்.

நன்றி:தினக்கதிர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.