பக்கங்கள்

03 மார்ச் 2013

அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தில் ஒரு மண்ணும் இல்லை!

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தீர்மானம் எத்தகையது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விளக்கமளித்துள்ளது. வொஷிங்டனில் வெள்ளியன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ட்ரோல் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். ''ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ளதாக அறிவித்துள்ள தீர்மானம் 2012இல் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இருந்து எவ்வாறு வேறுபட்டது'' என்று செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ட்ரோல், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. நல்லிணக்கம், மற்றும் பொறுப்புக் கூறலுக்கு இலங்கை இன்னும், அதிகம் செய்வதற்கு ஊக்குவிக்கும் வகையில் 2012ஆம் ஆண்டு தீர்மானத்தின் மீது இந்தத் தீர்மானம் கொண்டுவரப்படும். இந்தத் தீர்மானம் இலங்கை அரசாங்கத்தை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துகளை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட தனது மக்களுக்கான கடப்பாடுகளை பின்பற்றும் படி கேட்டுக்கொள்ளும். இதுதான் தீர்மானத்தின் உள்ளடக்கம். இதற்கு நாம் அனுசரணை வழங்கி, ஆதரவளிப்போம் எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.