பக்கங்கள்

05 மார்ச் 2013

கிளிநொச்சியில் வெவ்வேறு விபத்துக்களில் 24பேர் காயம்

கிளிநொச்சியில் இன்று அதிகாலை தொடக்கம் காலை வரையான நேரத்துக்குள் நான்கு வெவ்வேறு விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.இதில் 24 பேர் காயமடைந்து கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை முட்கொம்பன் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்த பஸ் புதுமுறிப்பு பகுதியில் தடம்புரண்டது. இதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் ஏ – 9 வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை வான் ஒன்று வீதியை விட்டு விலகிச்சென்று தடம்புரண்டுள்ளது. இதில் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 06 பேர் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சி நகர் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்தனர். உருத்திரபுரம் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.